Saturday, January 24, 2009

NAN KADAVUL FULL STORY - PART 2

இரண்டாவது பாதியில் ரெண்டு நாள் கழித்து வெளியே வரும் ஆர்யாவிற்கு பூ வீட்டில் யாரும் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைகிறான்.அன்று மாலையில் பூ வின் தந்தையும் தாயும் கழுத்து அறுபட்டு ஒரு ஓடையில் இறந்து கிடக்கிறார்கள்.

இந்த கொலைப்பழி ஆர்யாவின் மீது விழும் யாரும் நினைத்து இருந்தால், அதற்க்கு நான் பொறுப்பு அல்ல, அது கோவில் தர்மகர்த்தாவின் மீதும், அவர் மகன் மீதும் விழுகிறது.அவர்கள் சிறை செல்லும் முன் ஆர்யாவிடம் சில உண்மைகளை சொல்லி விட்டு செல்கிறார்கள், ஆர்யா பூ வின் சாதகம் உள்ள அந்த சாமியாரிடம் சென்று அவரை மிரட்டி உண்மைகளை அறிந்து கொள்கிறான் .இதன் பின் படம் காசிக்கு செல்கிறது .

காசியில் பூ வை தேடி தேடி தெரு தெருவை அலைகிறார் ஆர்யா, மூலை, முடுக்கு ஒன்று விடாமல் தேடுகிறான், அவனால் அவளை கண்டு பிடிக்க முடியவில்லை, அங்கு உள்ள ஒரு சாமியாரை ஒரு ஆபத்திலே இருந்து காப்பாற்றுகிறான். பூ வை தேடி அலையும் போது,அவரிடன் தான் வந்த நோக்கத்தை ௬றுகிறான், அவரும் அவனுக்கு தெரிந்தவர்களிடமும் சொல்லி வைக்கிறார்.

இந்நிலையில் பூ வை கடத்திய கும்பல் ஒரு பெரிய யாகத்திற்கு ஏற்ப்பாடு பண்ணுகிறார்கள்,அவளுடன் சேர்த்து பத்து பெண்களை கடத்தி இருக்கிறார்கள் என்ற உண்மையும் அவளுக்கு தெரிய வருகிறது.

தற்செயலாக பூ வின் சாதக்கத்தை பார்வையிடும் ஆர்யாவினால் காப்பாற்ற பட்ட சாமியார், ஒரு உண்மையை சொல்லுகிறார், இவளை போன்ற சாதகம் உடைய பத்து கன்னி பெண்களை நரபலி செலுத்தினால் கடவுள் திரும்பவும் பூமிக்கு வருவார் என்பது ஐதிகம் என சொல்லுகிறார்.

பெரும் கஷ்டங்களுக்கு இடையிலே அந்த யாகம் நடக்கும் தேதியை கண்டு பிடித்து, அந்த இடத்திற்கும் செல்கிறார் ஆர்யா, அவன் அங்கு செல்லவும் பூ வின் தலை துண்டிக்க படவதையும் அவன் கண் முன்னே நடக்கிறது. இதனால் கொதித்து எழும் ஆர்யா, அங்கு உள்ள அனைவரையும் கொன்று விட்டு தானும், தன் தலையை வெட்டி இறப்பதோடு கதை முடிகிறது, விமர்சனமும் முடிகிறது

2 comments:

Anonymous said...

fake news

go and see movie in theater

RamPrasad said...

sorry friend for this story....i watched the movie.