Sunday, January 25, 2009

NAN KADAVUL FULL STORY - PART 1

பாலாவின் தொடர் வெற்றி என்றே சொல்லலாம் "நான் கடவுள்", காட்சிகள் அனைத்து மிக தத்துருவமாகவும், நேர்த்தியாகவும் அழகாகவும் எடுக்க பட்டு உள்ளது, தமிழ் சினிமாவின் எதாத்ததிற்க்கு கிடைத்த மற்றுமொரு வெற்றி நான் கடவுள், படத்தின் கதை இதோ

ஒரு சாதி கலவரத்திலே தாழ்த்தப்பட்ட சாதி பெண் ஒருவள் கற்பழிக்கப் படுகிறாள், அந்த சம்பவத்தால் அவள் மனநிலை பாதிக்கப் படுகிறது,அவள் கர்ப்பமும் ஆகிறாள், அவளுக்கு பிறக்கும் குழந்தையே கதையின் நாயகன் ஆர்யா , அந்த குழந்தை பிறந்தவுடன் அவன் தாய் இறக்கிறாள், அந்த குழந்தை யாருக்கும் தெரியாமல் குப்பை தொட்டியிலே போட்டு விட்டு சென்று விடுகிறார்கள். அந்த குழந்தையை கோவிலில் பிச்சை எடுக்கும் ஒருவர் காப்பாற்றுகிறார்.

அதே கோவிலில் பூ விக்கும் பூக்காரிக்கும் ஒரு மகள் பிறக்கிறாள், அவள் பெயர் பூவு(பூஜா), குப்பை தொட்டி ஆர்யாவின் பெயர், இருவரும் ஒன்றாக வளர்வதோடு எழுத்து முடிகிறது, படம் இன்னும் ஆரமிக்கவில்லை,அதனாலே தயவு செய்து பொறுமை காக்கவும்

சிறு வயது முதலே ஒன்றாக வளர்ந்து வந்ததால் அவர்கள் இருவரும் நட்பில் ஆரம்பித்து காதலில் முடிந்திருக்கும் என்று யாரவது நினைத்தால் அது உண்மைதான்.



வாலிப வயது ஆர்யா கோவிலில் யானையை குளிப்பாட்டவும், கோவிலை சுத்தப்படுத்தவும் வேலைகளை செய்து வருகிறான். கோவில் தர்மகர்த்தாவின் மகனுக்கு பூ வின் மீது ஒரு ஆசை, அது காதலாக இருக்க முடியாது,ஏன் என்றால் இவர் கதை நகற்றுவதற்க்கு ஊன்று கோலாய் உதவும் முதல் வில்லன்

அவன் பூ வை அடைய போடும் திட்டங்களில் குப்பை தொட்டி ஆர்யா மண் அள்ளி போட்டு விடுகிறாள், அதையும் மீறி அவன் ஒரு முறை பூ விற்கு காப்பியில் மயக்க மருந்து கொடுத்து விடுகிறான், யோசனை கொஞ்சம் பழசு தான், கோவில் தர்ம கர்த்தா அதனை பார்த்து விட, இந்த முறையும் அவன் திட்டம் பலிக்கவில்லை.

குப்பை தொட்டி ஆர்யாவிர்க்கும் இந்த விஷயம் தெரிந்து விட அவன் தர்ம கர்த்தா மகனை தேடி அலைகிறான், தர்ம கர்த்தா ஆர்யாவிடமும், பூ விடமும் தன் மகனை மன்னிப்பு கேட்க்க வைக்கிறார்.


தர்ம கர்த்தா தன் மகனுக்கு அறிவுரை ௬றுகிறார், அவளை நீ வசியம் பண்ண வேண்டும், அப்போது தான் அவள் உனக்கு அடிமையாய் இருப்பாள். பூ வின் சாதகத்தை எடுத்து கொண்டு ஒரு சாமியாரிடன் போகிறார்கள், அவர் இவள் சாதகத்தை பார்த்து, இவளை ஒன்றும் செய்ய முடியாது என்றும், இவளை தொட்டவன் அடுத்த ரெண்டு நாளில் சாவான் என்றும் ௬றுகிறார். இதை கேட்டதும் பயந்து அவள் சாதகத்தையும் கீழே போட்டு விட்டு இருவரும் ஓடி விடுகிறார்கள்

அந்த சம்பவத்திருக்கு பிறகு,பூ தன்னை யாரோ பின் தொடர்வதாகவும், தன் நடவடிக்கைகளை கண்காணிக்கபடுவதாகவும் ஆர்யாவிடம் சொல்லுகிறாள்,முதலில் அதை நம்ப மறுக்கும் ஆர்யா,அடுத்தடுத்து நடைபெறும் சம்பவங்களால் அவனும் உண்மை என நம்புகிறான்.
அதை தடுத்து நிறுத்த வழி தெரியாமல் பூ விற்கும், ஆர்யாவிருக்கும் திருமண ஏற்ப்பாடு செய்கிறான். திருமணத்திற்கு முதல் நாள் ஆர்யா காவல் துறையால் கைது செய்யப்படுகிறான் ஒரு திருட்டு வழக்கில், இதனால் திருமணமும் நின்று விடுகிறது.


இது இடைவேளை நேரம்,வழக்கம் போல டீ,காப்பி குடிக்க போறவங்க போகலாம்.

0 comments: